டோக்கியோ: “நல்ல வெளிச்சமான ஆரஞ்சு நிறம்... அந்த ஆண்டின் முதல் சூரிய உதயம்போல் அந்த சம்பவம் நடந்தேறியது...” என்று அந்தக் கொடிய தாக்குதலை நினைவுகூர்கிறார் ஜப்பானின் சடே. தற்போது 90 வயதாகும் சடே, இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசி ஏற்படுத்திய வரலாற்றின் மோசமான போர்த் தாக்குதலின் சாட்சியாக நம் முன் நிற்கிறார்.

அது குறித்து சடே தொடர்ந்து விவரிக்கும்போது, “நான், என் பாட்டி வீட்டில் இருந்தேன். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது, நான் சுவற்றில் தூக்கி வீசப்பட்டேன். வீட்டிலிருந்த கண்ணாடிகள் உடைந்தன. என் தந்தையை சகோதரர் பலத்த காயத்துடன் தூக்கி வந்தார். என் தந்தைக்கு உடல் முழுவதும் தீக்காயம். குடிக்க தண்ணீர் கேட்ட என் தந்தைக்கு என்னால் தண்ணீர் வழங்க முடியாமல் போனதை நினைத்து இன்று வருத்தம் கொள்கிறேன். என் தந்தை சிகிச்சைப் பலனின்றி இரண்டு தினங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். என் தாயும் உயிரிழந்தார்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் சடே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0v9dwAE