
காபூல்: போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் ஐ.நா. குழு, தலிபான்களின் கெடுபிடி காரணமாக வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. தலிபான்கள் ஒத்துழைப்பு கிட்டாவிட்டால் ஆப்கனிலிருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தயாராக இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் அங்கே தலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். தலிபான்களின் ஆட்சி இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தின்படியே நடைபெறும் என அவர்கள் பிரகடனம் செய்தனர். இருப்பினும் 1990-களில் இருந்ததுபோல் அல்லாமல் சுதந்திரமான ஆட்சி இருக்கும் என்று கூறினர். ஆனால், அதை எதுவுமே அவர்கள் எள்ளளவும் கடைப்பிடிக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LxdMhFP
0 Comments